Sunday 12 February 2017

ஆண் குறியைப் பெரிதாக்க வழியுள்ளதா? அறிவியல் பூர்வமான

 ஆண் குறியைப் பெரிதாக்க வழியுள்ளதா? அறிவியல் பூர்வமான தகவல்


ஆண் குறியைப் பெரிதாக்க வழியுள்ளதா?

உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையால் மட்டுமே அது முடியும். நிரந்தரமாக உங்கள் குறியை பெரிதாக்குவதாக சொல்லும் மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் மற்றுமுள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் பயன் அளிக்கக் கூடியவை அல்ல. உங்கள் குறியை பெரிதாக்குவதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகலாம். மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இதற்கான அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே அநேக மருத்துவர்கள் உங்களை சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்.





நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல். பெரும்பாலான ஆண்கள் தங்கள் குறியின் அளவு குறித்து வருந்துகிறார்கள். மேலும் குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்றும் நினைக்கிறார்கள். இதில் உண்மை இருப்பது போல் தோன்றினும், எப்போதும் குறியின் அளவுக்கும் இன்பத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை என்பதே உண்மை.

--




முதலில் ஆண்குறிகளின் அளவு குறித்து சில உண்மைகளை நாம் பார்ப்போம். விறைத்த ஆண் குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்) நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்) தடிமனும் உடையதாய் இருக்கிறது. நீளமான அல்லது தடிமனான குறியினால் மட்டும் உங்கள் இணையை திருப்திப்படுத்திவிட முடியாது என்பதே உணமை. உங்கள் இணையின் தேவை அறிந்து, உங்கள் இணையின் உடல் அறிந்து செய்யும் சேவைகளே முழு திருப்தி தருவதாக பெரும்பாலான பெண்கள் ஒரு கணக்கெடுப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

உடலுறவின்போது இதெல்லாம் செய்யாதீங்க

உடலுறவின்போது இதெல்லாம் செய்யாதீங்க



உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம்தேவைப்படுகிற இயற்கையின் உந்துதல். அதில் இன்பத்தின் எல்லையைத் தொட்டு சுகம் காண்பதைத் தான் உச்சம் என்கிறோம்.

அதை அழுத்தமாக அனுபவிக்க வேண்டுமென்றே பெண்கள் விரும்புவார்கள்.ஆனால் ஆண்களோ மிக அதிக ஆவலும் விருப்பமும் கொண்டிருப்பார்கள். உடலுறவில் அதிக நேரம்திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
அதனாலேயே அவர்களுக்கு உச்சம் வெகு தாமதமாகவே அடைய முடிகிறது. பல நேரங்களில் உச்சத்தை அனுபவிக்காமலேயே உறவை முடித்துக் கொள்வதும் உண்டு.


---

உடலுறவு என்பது இருவரையுமே இன்பத்தில் ஆழ்த்துகிற ஒரு சுகமான அனுபவம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள உண்மை என்னவென்றால், இந்த விஷயத்தில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து மனசு வைத்தால் ஒருவருக்கு மற்றவர் சுகத்தைத் தர முடியும்.
ஆனால் ஆண்கள் பலரும் தனக்கு தோன்றியதை மட்டுமே கட்டில் விளையாட்டில் நிறைவேற்றுகிறார்கள். அதில் சில செயல்கள் பெண்களுக்குப் பிடிப்பதில்லை. பெண்கள் வெறுக்கும் சில விஷயங்களைத் தான்ஆண்கள் உடலுறவு நேரத்தில் செய்கிறார்கள். அவற்றைத் தவிர்த்தாலே நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு கட்டிலில் கிடைக்கும்.
பெண்கள் கட்டிலில் வெறுக்கும் பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடிக்கிறது என்பதால் அவர்களிடம் சொல்வதில்லை. அதனால் நீங்களாகவே புரிந்துகொண்டு, அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அப்படி என்னென்ன விஷயங்கள் தான் பெண்கள் வெறுக்கிறார்கள்.
ஆண்கள்பொதுவாகவே உடலுறவு நேரத்தில் முன் விளையாட்டுகளில்அதிக ஆர்வமும் அக்கறையும் செலுத்துவதில்லை. ஆனால் பெண்கள் முன்விளையாட்டுகளை அதிகமாக ரசிக்கிறார்கள்.
தொடங்கும் போது உங்கள் விளையாட்டுக்களை ரசிப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நீங்கள்அதைச் செய்யாத பொழுது,பெரிய ஏமாற்றம் அடைகிறார்கள்.